​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாலையில் கொட்டிய நிலக்கரி துகள்களால் விபத்துகள் நிகழ்ந்த விவகாரம்

Published : Apr 27, 2024 6:14 PM

சாலையில் கொட்டிய நிலக்கரி துகள்களால் விபத்துகள் நிகழ்ந்த விவகாரம்

Apr 27, 2024 6:14 PM

காரைக்கால் மாவட்டம் நடுஓடுதுறை தேசிய நெடுஞ்சாலை வளைவு பகுதியில், சாலையில் கொட்டியிருந்த நிலக்கரியால் ஒரே நாளில் அடுத்தடுத்து 7 இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை அம்மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேரில் ஆய்வு செய்தார்.

சாலையில் நிலக்கரி கொட்டப்பட்டு மீண்டும் விபத்து நேரிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் துறைமுக அதிகாரிகளை எச்சரித்த மாவட்ட ஆட்சியர், நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகள் விதி மீறுகின்றனவா என்பதை கண்காணிக்குமாறு போக்குவரத்து காவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.