​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை இருமடங்கு உயர்வு

Published : Apr 27, 2024 4:26 PM

தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை இருமடங்கு உயர்வு

Apr 27, 2024 4:26 PM

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆழ்கடலில் மீன்பிடிக்க 60 நாட்கள் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ள நிலையில், வரத்து குறைவால் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

நாட்டுப்படகுகள் மற்றும் பைபர் படகுகளில் மீன்கள் பிடித்துவரப்படும் நிலையில், ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையான முரல் மீன்கள் 400 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்பனையான சீலா மீன்கள் ஆயிரம் ரூபாய் வரையும் விற்கப்படுகிறது.