அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிமராமத்து பணிகளை தி.மு.க அரசு தொடர தவறியதே, தமிழகத்தில் நிலவும் வறட்சியால் பொதுமக்கள் பாதிக்கப்பட காரணம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில், அ.தி.மு.க சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை திறந்துவைத்த பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 100 ஏரி திட்டத்தின் கீழ் சுமார் 4 ஆயிரம் ஏரிகளில் மேட்டூர் அணையின் உபரிநீர் சேமிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் அதிகளவு போதை பொருள் புழக்கம் ஆகியவற்றால், தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.