தமிழ்நாடு முழுவதும் இயங்கும் அனைத்து அரசு பேருந்துகளின் தரம் குறித்து 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து, அவற்றில் பழுதுகள் இருந்தால் அடுத்த 48 மணி நேரத்தில் சரி செய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
சேதமடைந்த பேருந்துகள் இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிகாரிகளிடம் நேற்று ஆலோசனை மேற்கொண்டதையடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.