​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாமூல் கேட்டு இரும்பு லோடு லாரியை மறித்த கும்பல்... தடைகளை தட்டிவிட்டு மாமூல் தராமல் லாரியை ஓட்டி வந்த தமிழக ஓட்டுநர்

Published : Apr 27, 2024 8:43 AM

மாமூல் கேட்டு இரும்பு லோடு லாரியை மறித்த கும்பல்... தடைகளை தட்டிவிட்டு மாமூல் தராமல் லாரியை ஓட்டி வந்த தமிழக ஓட்டுநர்

Apr 27, 2024 8:43 AM

தூத்துக்குடியை சேர்ந்த லாரி ஒன்று ஆந்திரமாநிலம் நாயுடு பேட்டையில் இரும்பு லோடு ஏற்றுவதற்கு சென்றபோது, உள்ளூர் மாமூல் கும்பல் லாரியை வழிமறித்து தங்கள் ஊருக்கு 400 ரூபாய் மாமூல் தரவேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது, ஓட்டுனர் மாமூல் கொடுக்க மறுத்ததால் லாரியை செல்லவிடாமல் மறித்து அவர்கள் அடாவடி செய்தது தெரியவந்தது

லாரியை மறிக்க மாமூல் கும்பல் ஏற்படுத்திய தடைகளை தட்டிவிட்டு மாமூல் எதுவும் கொடுக்காமலே லாரியை ஓட்டுநர் கன்னியாகுமரிக்கு ஓட்டிவந்தார்,

ஆந்திர அரசுடன், தமிழக அரசு பேசி மாமூல் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே லாரி உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது