​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஈரோட்டில் விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்த சிறுத்தை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

Published : Apr 27, 2024 6:51 AM

ஈரோட்டில் விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்த சிறுத்தை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

Apr 27, 2024 6:51 AM

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறி சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்துவந்த சிறுத்தைப் புலி, தர்மாபுரம் கிராமத்தில் கூண்டில் சிக்கியது.

பின்னர் அதற்கு மயக்க ஊசி செலுத்தி , கூண்டுடன் வேனில் ஏற்றி அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தட்டக்கரை வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவித்தனர். கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்