​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேராசிரியர் நிர்மலா தேவி ஆஜராகாததால் தீர்ப்பை 29ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

Published : Apr 26, 2024 12:30 PM

பேராசிரியர் நிர்மலா தேவி ஆஜராகாததால் தீர்ப்பை 29ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம்

Apr 26, 2024 12:30 PM

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக பேராசிரியை நிர்மலா தேவி உள்ளிட்டவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை நீதிபதி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், நிர்மலாதேவி ஆஜராகாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.