​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேத்தியாத்தோப்பு தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல்

Published : Apr 26, 2024 10:45 AM

சேத்தியாத்தோப்பு தேர்வு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் பறிமுதல்

Apr 26, 2024 10:45 AM

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் பூங்குழலி, உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகிய மூன்று பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 24ஆம் தேதி அன்று பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து மூன்று பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது சோதனை நடைபெறுகிறது.