​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஞ்சா போதையில் பொதுமக்கள் 12 பேர் மீது தாக்குதல்... 3 பேரில் 2 பேரை கைது செய்த போலீசார்

Published : Apr 26, 2024 9:19 AM

கஞ்சா போதையில் பொதுமக்கள் 12 பேர் மீது தாக்குதல்... 3 பேரில் 2 பேரை கைது செய்த போலீசார்

Apr 26, 2024 9:19 AM

சென்னை அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயலில் கஞ்சா போதையில் பொதுமக்கள் 12 பேரை கத்தியால் தாக்கிய 2 பேரை கைது செய்த போலீசார் மேலும் ஒரு நபரை தேடி வருகின்றனர்.

சோழம்பேடு சாலை கணபதி நகர் பகுதியில் வசிக்கும் அபினேஷ், விஷ்ணு மற்றும் முத்து ஆகிய 3பேரும் ஆபாசமாக ஒருவரையொருவர் திட்டிக்கொண்டதாகவும், அதனை தட்டிக்கேட்டவர்களை கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இது பற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் அபினேஷ் மற்றும் விஷ்ணு ஆகியோரை கைது செய்தனர். முத்துவை தேடி வருகின்றனர்.