​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நைஜீரியாவில் பெய்த கனமழையால் சேதமடைந்த சிறைச்சாலை... 119 கைதிகள் தப்பி ஓட்டம்

Published : Apr 26, 2024 8:29 AM

நைஜீரியாவில் பெய்த கனமழையால் சேதமடைந்த சிறைச்சாலை... 119 கைதிகள் தப்பி ஓட்டம்

Apr 26, 2024 8:29 AM

நைஜீரியாவில், கனமழையால் பலத்த சேதமடைந்த சிறைச்சாலை ஒன்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி சென்றனர். 

சுலேஜா நகரில், தொடர்ந்து பல மணி நேரம் பெய்த கனமழையால் சிறைச்சாலை சுற்றுச்சுவரின் ஒரு பகுதியும், சில கட்டடங்களும் இடிந்து விழுந்தன. இதனை சாதகமாக்கிக்கொண்டு 119 கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

அவர்களில் 10 பேரை மீண்டும் கைது செய்த போலீசார், எஞ்சியவர்களை உளவுத்துறை துணையுடன் தேடிவருகின்றனர்.