​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்யாவிற்காக உளவு பார்த்த உக்ரைன் நாட்டு தம்பதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை

Published : Apr 26, 2024 7:55 AM

ரஷ்யாவிற்காக உளவு பார்த்த உக்ரைன் நாட்டு தம்பதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை

Apr 26, 2024 7:55 AM

ரஷ்யாவிற்காக உளவு பார்த்த உக்ரைன் நாட்டு தம்பதிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ராணுவ நிலைகள் குறித்து தகவல் அளிப்போருக்கு வெகுமதி வழங்குவதாக ரஷ்ய உளவுத்துறை டெலிகிராம் சேனலில் அளித்த விளம்பரத்தை பார்த்து அந்த தம்பதி விலைபோனதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் அளித்த தகவலின் பேரில், கெர்சன் நகரில், உக்ரைன் வீரர்கள் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் துல்லியமாக பீரங்கி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.