​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூர் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.1.20 லட்சம் சிக்கியத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு

Published : Apr 26, 2024 7:48 AM

கடலூர் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.1.20 லட்சம் சிக்கியத்தில் 2 பேர் மீது வழக்குப்பதிவு

Apr 26, 2024 7:48 AM

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன், உள்ளாட்சி நிதி தணிக்கை அதிகாரிகள் பூங்குழலி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பேரூராட்சி செலவு கணக்கில் உள்ள முறைகேடுகள் மீது எடுக்காமல் இருக்க, தணிக்கை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் வைத்திருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.