​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குத்துச்சண்டை வீரரை போல தாக்கிய கொடூர மகன்..! சேகோ ஆலை அதிபர் பலி..! சிசிடிவி காட்சிகளால் அம்பலமான உண்மை

Published : Apr 25, 2024 4:43 PM



குத்துச்சண்டை வீரரை போல தாக்கிய கொடூர மகன்..! சேகோ ஆலை அதிபர் பலி..! சிசிடிவி காட்சிகளால் அம்பலமான உண்மை

Apr 25, 2024 4:43 PM

பெரம்பலூர் அருகே சொத்தில் பங்கு தராத தந்தையை மகன் குத்துச்சண்டை வீரரை போல தாக்கிய நிலையில் ஒரு மாதம் சிகிச்சைக்கு பின்னர் அவர் பலியானார். சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மகனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பெற்றக்கடனை மறந்து தந்தையை மகன் கொலை வெறியுடன் தாக்கும் பதை பதைக்கும் காட்சிகள் தான் இவை

சேலம் மாவட்ட ஆத்தூர் அருகே சேகோ ஆலை நடத்திவந்தவர் 65 வயது குழந்தைவேலு. இவருடன் சேகோ ஆலையை கவனித்து வரும் மகன் சந்தோஷ் பெரம்பலூர் கிருஷ்ணாபுரத்தில் தனியாக தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி, மகனை பார்க்க குழந்தை வேலு கிருஷ்ணாபுரம் சென்றுள்ளார். அப்போது சொத்து கேட்டு சண்டையிட்ட சந்தோஷ், தனது தந்தையை வயோதிகர் என்றும் பாராமல் குத்துச்சண்டை வீரர் போல் ஆக்ரோஷமாக குத்தியும், கால்களால் மிதித்தும் தாக்கியதால் குழந்தைவேல் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்

ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பிய குழந்தைவேல், கடந்த 18-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மனைவி ஹேமா புகார் அளித்த நிலையில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தந்தையை, மகன் தாக்கும் சிசிடிவி காட்சிகள் 21 ந்தேதி வெளியானதால் சந்தோஷை பிடித்து கைகளத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். சொத்தில் பங்கு தராத ஆத்திரத்தில் தந்தையை சந்தோஷ் தாக்கியதாகவும், சந்தேக மரணம் என்று வழக்கு பதிந்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்