​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூரில் வேலை செய்த கடையில் இருந்த பொருட்களை திருடி விற்ற ஊழியர்கள் கைது

Published : Apr 25, 2024 1:02 PM

கடலூரில் வேலை செய்த கடையில் இருந்த பொருட்களை திருடி விற்ற ஊழியர்கள் கைது

Apr 25, 2024 1:02 PM

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாத்திரம் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து கொண்டே, அங்கிருந்த பொருட்களை திருடி தனியாக வியாபாரம் செய்து மோசடி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்கரையில் உள்ள அக்கடையின் உரிமையாளர், அதிக வியாபாரம் நடந்தும் லாபம் கிடைக்கவில்லையே என்ற சந்தேகத்தில், சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், ஊழியர்கள் கடையின் மின்சாரத்தை துண்டித்துவிட்டு பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.