​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் போதையில் சாலையில் அசைவின்றி கிடந்த இளைஞர்கள்... கஞ்சா இல்லையாம்.. மது போதையாம்.. போலீசார் வினோத விளக்கம்

Published : Apr 25, 2024 12:29 PM

சென்னையில் போதையில் சாலையில் அசைவின்றி கிடந்த இளைஞர்கள்... கஞ்சா இல்லையாம்.. மது போதையாம்.. போலீசார் வினோத விளக்கம்

Apr 25, 2024 12:29 PM

சென்னை அடையாறு பகுதியில் போதை மயக்கத்தில் சாலையில் படுத்துகிடந்த இருவரை போலீசார் தட்டி எழுப்பியும் எவ்வித அசைவு இன்றி கிடந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது , கஞ்சா போதையில் இது போன்று கிடப்பதாக கண்டனங்களும் எழுந்தது.

இந்த நிலையில் இருவரும் வேலை தேடி சென்னைக்கு வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்றும் வேலை கிடைக்காதததால் மது அருந்திவிட்டு சாலையில் படுத்து உறங்கியதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்