சேலம் மாவட்டம் தலைவாசலில், பேருந்துக்காக சாலையோரம் காத்திருந்தவர்கள் மீது சரக்கு ஆட்டோ மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர், அரசுப் பேருந்து நடத்துநர் படுகாயம் அடைந்தார்.
தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சாலையோரமாக பயணிகள் நின்றிருந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.