சென்னை பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள மதுபான கடைக்கு முன்பு ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் 3 பேர், அங்கிருந்து செல்லுமாறு கூறிய போலீசாருடன் கைகலப்பில் ஈடுபட்டு, காவல்துறை ரோந்து வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்தனர்.
தாம்பரம் சங்கர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதால் இருட்டிய பின் வீட்டில் இருந்து வெளியே வர பெண்கள், குழந்தைகள் அச்சப்படுவதாக கூறப்படும் நிலையில், போலீசார் மீதே தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.