​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் நிறுவன மேலாளரை பணம் கேட்டு மிரட்டிய தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் கைது

Published : Apr 24, 2024 12:02 PM

தனியார் நிறுவன மேலாளரை பணம் கேட்டு மிரட்டிய தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் கைது

Apr 24, 2024 12:02 PM

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே, தன்னை பணம் கேட்டு மிரட்டி தாக்கியதாக தனியார் நிறுவன மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், வளையக்கரணை திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வடக்குப்பட்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ள சுப்பிரமணி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தனது கூட்டாளிகள் 10 பேருடன் வந்து பணம் கொடுத்தால் தான் கட்டுமான வேலைகளை தொடர முடியும் என மிரட்டியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.