​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை கே.கே.நகரில் கோவில் திருவிழாவுக்குள் கஞ்சா போதையில் நுழைந்து பெட்ரோல் குண்டு வீசிய ரௌடிகள் தாக்குதல்

Published : Apr 24, 2024 10:38 AM

சென்னை கே.கே.நகரில் கோவில் திருவிழாவுக்குள் கஞ்சா போதையில் நுழைந்து பெட்ரோல் குண்டு வீசிய ரௌடிகள் தாக்குதல்

Apr 24, 2024 10:38 AM

சென்னை கே.கே.நகர் கன்னிகாபுரம் கங்கையம்மன் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா கூட்டத்துக்குள் புகுந்த ரௌடிகள் சிலர் பொதுமக்களை கத்தியால் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

பொதுமக்கள் அவர்களைத் தடுக்க முயன்றதால் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டைப் பிடித்து செயலிழக்கச் செய்த மக்கள், ரௌடிகளை சுற்றி வளைத்துப் பிடித்து, அடித்து, உதைத்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட கோபி என்ற ரௌடியும் சிறுவன் ஒருவனும் போலீசில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மற்றொருவனைத் தேடி வருகின்றனர்.