​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சோமாலியாவில் இருநாட்டு ஒப்பந்தம் அடிப்படையில் போர்க்கப்பல் நிறுத்தி வைப்பு

Published : Apr 24, 2024 8:33 AM

சோமாலியாவில் இருநாட்டு ஒப்பந்தம் அடிப்படையில் போர்க்கப்பல் நிறுத்தி வைப்பு

Apr 24, 2024 8:33 AM

சோமாலியா நாட்டுடன் செய்துக் கொண்ட பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் அடிப்படையில் துருக்கி தனது போர்க்கப்பலை சோமாலியாவின் தலைநகர் மொகடிசுக்கு அனுப்பி வைத்தது.

அந்த கப்பலுக்கு சோமாலியா அதிபர் ஹசன் ஷேக் மொகமத் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சோமாலியாவில் அடிக்கடி நடைபெறும் கடற்கொள்ளையை தடுக்கும் வகையில் அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் துருக்கி கமாண்டர் செர்கான் டோகன் தெரிவித்துள்ளார்.