​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கள்ள உறவால் காதல் கணவனை கூலிப்படை ஏவி கொன்ற கொடூர மனைவி.. மக்களவைத் தேர்தலால் வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்..!

Published : Apr 23, 2024 4:11 PM

கள்ள உறவால் காதல் கணவனை கூலிப்படை ஏவி கொன்ற கொடூர மனைவி.. மக்களவைத் தேர்தலால் வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்..!

Apr 23, 2024 4:11 PM

கணவரை கொன்று புதைத்து விட்டு, ஊரை விட்டு ஓடியதாக 2 ஆண்டுகளாக நாடகமாடிய பெண், மக்களவைத் தேர்தலால் போலீசாரிடம் சிக்கினார்.

திருவாடானையை அடுத்த கொடுங்குளத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் என்ற டெய்லர் தன்னைப் பிரிந்து வெளியூர் சென்று விட்டதாக அவரது காதல் மனைவி ஆர்த்தி 2 ஆண்டுகளாக கூறி வந்தார்.

அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கவாவது ஸ்ரீகாந்த் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று அவரது உறவினர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஸ்ரீகாந்த் ஊருக்கு வராததால் அவரது நண்பரான பெட்டிக்கடை வைத்திருக்கும் இளையராஜா என்பவரிடம் அவர்கள் விசாரித்ததாக தெரிகிறது.

இளையராஜா கூறிய பதிலால் சந்தேகம் எழுந்ததை அடுத்து ஸ்ரீகாந்தின் உறவினர்கள் போலீசில் தகவல் தெரிவித்தனர். இளையராஜாவை விசாரித்த போது, தமக்கும் ஸ்ரீகாந்தின் மனைவி ஆர்த்திக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், அது தெரிந்து ஸ்ரீகாந்த் கண்டித்ததால், கூலிப் படையினர் 2 பேருடன் சேர்ந்து ஸ்ரீகாந்தை தேவகோட்டையை அடுத்த சிறுவாச்சி கிராமத்துக்கு அழைத்துச் சென்று வெட்டிக் கொன்று புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கொலை தொடர்பாக ஆர்த்தி, இளையராஜா மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்த போலீசார், கூலிப்படையினர் 2 பேரை தேடி வருகின்றனர்.