​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங். ஆட்சியில் ஹனுமான் சாலீசா கேட்பது கூட குற்றம் - பிரதமர் மோடி

Published : Apr 23, 2024 3:33 PM

காங். ஆட்சியில் ஹனுமான் சாலீசா கேட்பது கூட குற்றம் - பிரதமர் மோடி

Apr 23, 2024 3:33 PM

காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் சாலீசா கேட்பது கூட குற்றமாக கருதப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

ராஜஸ்தானின் டோங்க்-சவாய் மாதோபூரில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, ராம நவமி கொண்டாட்டங்கள் கூட தடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மக்களில் பெரும்பாலானோரின் செல்வத்தைப் பறித்து தங்களுக்கு சாதகமான குறிப்பிட்ட சிலருக்கு விநியோகிக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நாட்டு மக்கள் முன் தாம் வைத்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், தமது 90 நிமிட உரை காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணியை மிகவும் ஆத்திரமடைய செய்துள்ளதாகவும், அவர்கள் எல்லா இடங்களிலும் தம்மைத் திட்டத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.