​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திரவில் மிளகாய் பொடியை தூவி திருமண வரவேற்பு மேடையில் இருந்து மணப்பெண்ணை கடத்த முயன்ற பெண் வீட்டார்

Published : Apr 23, 2024 12:06 PM

ஆந்திரவில் மிளகாய் பொடியை தூவி திருமண வரவேற்பு மேடையில் இருந்து மணப்பெண்ணை கடத்த முயன்ற பெண் வீட்டார்

Apr 23, 2024 12:06 PM

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து, திருமண வரவேற்புக்கு தயாராகிக் கொண்டிருந்த மணப்பெண்ணை மிளகாய்பொடியை தூவி இழுத்துச் சென்ற அவரது உறவினர்களிடமிருந்து அவரை மாப்பிள்ளை வீட்டார் மீட்டனர்.

கங்கவரத்தை சேர்ந்த சினேகா, தன்னுடன் கல்லூரியில் படித்த வெங்கட் ஆனந்த் என்பவரை கோயிலில் வைத்து திருமணம் செய்த நிலையில், வெங்கட் ஆனந்தின் பெற்றோர் திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

சினேகாவின் பெற்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த சினேகாவின் தாய், சகோதரன் மற்றும் முறைமாமன் ஆகியோர் சினேகாவை அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளனர்.