​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூரில் பெண் கொலை குறித்து அவதூறு பரப்பியதாக அண்ணாமலை மீது போலீஸார் வழக்குப் பதிவு

Published : Apr 23, 2024 8:28 AM

கடலூரில் பெண் கொலை குறித்து அவதூறு பரப்பியதாக அண்ணாமலை மீது போலீஸார் வழக்குப் பதிவு

Apr 23, 2024 8:28 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தவறான தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக அவர் மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், பாஜகவுக்கு வாக்களித்த காரணத்துக்காகத்தான் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டார் என்பதை அவரது கணவரும் உறவினர்களும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், பொய்யான வழக்குகள் தொடுத்து குரல் வளையை நசுக்கிவிடலாம் என்று திமுக பகல் கனவு கண்டுகொண்டிருப்பதாகவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.