​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை திரும்ப போதுமான அரசுப் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி

Published : Apr 22, 2024 7:47 AM

சென்னை திரும்ப போதுமான அரசுப் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி

Apr 22, 2024 7:47 AM

சென்னையில் இருந்து மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தஞ்சை மற்றும் சுற்றுப்பகுதி ஊர்களுக்கு வந்தவர்கள், மீண்டும் சென்னைக்குத் திரும்ப போதுமான பேருந்துகள் இல்லாததால் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

தஞ்சை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் இடம் ஒதுக்கியதாக கூறி, நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீஸார் வரவழைக்கப்பட்ட நிலையில் பேருந்து நிலைய வாயில் கேட் மூடப்பட்டதால், பயணிகள் சாலையில் கால்கடுக்க நிற்கும் நிலை ஏற்பட்டது.