​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கைப்பந்து விளையாட்டு தகராறில் இளைஞர் குத்திக் கொலை.. 2 பேர் கைது: 4 பேர் தலைமறைவு..!!

Published : Apr 21, 2024 4:03 PM

கைப்பந்து விளையாட்டு தகராறில் இளைஞர் குத்திக் கொலை.. 2 பேர் கைது: 4 பேர் தலைமறைவு..!!

Apr 21, 2024 4:03 PM

கன்னியாகுமரி மாவட்டம் இடலாக்குடியில் கைப்பந்து விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை கஞ்சா போதையில் குத்தி கொலை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சபையார் குளத்தைச் சேர்ந்த ஆகாஷ், தனது நண்பர் சஜித் உடன் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் அவர்களை வழிமறித்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. ஆகாஷ் உயிரிழந்த நிலையில், சஜித்தை மருத்துவமனையில் சேர்த்த போலீஸார் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.