​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் கைதான 2 பேருக்கு பாக். தொடர்பு?: என்.ஐ.ஏ. தகவல்

Published : Apr 21, 2024 12:29 PM

ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் கைதான 2 பேருக்கு பாக். தொடர்பு?: என்.ஐ.ஏ. தகவல்

Apr 21, 2024 12:29 PM

பெங்களூர் ராமேஸ்வரம் கபே உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகளான அப்துல் மதீன் தாஹாவும் முசாவர் ஹூசேனும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ யை சேர்ந்த Colonel என்று அழைக்கப்படும் நபருடன் தொடர்பு கொண்டிருந்ததாக என்.ஐ.ஏ.அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்த இருவரும் இந்தியாவில் இளைஞர்களை தீவிரவாத செயல்களுக்குத் தூண்டி வரும் 20 பேர் கொண்ட ஐ.எஸ். தீவிரவாத குழுவுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், கிறிப்டோ வாலட் மூலம் தீவிரவாத செயல்களுக்கு பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.