​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“ஏய்... போலீஸ் ஓடி போயிரு”.. கல்லால் எறிந்து தப்பிய கஞ்சா வியாபாரி அட்டகாசம்..! கலக்கத்தில் கண்ணகி நகர்

Published : Apr 21, 2024 7:11 AM



“ஏய்... போலீஸ் ஓடி போயிரு”.. கல்லால் எறிந்து தப்பிய கஞ்சா வியாபாரி அட்டகாசம்..! கலக்கத்தில் கண்ணகி நகர்

Apr 21, 2024 7:11 AM

சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதையில் இளைஞர்களை கத்தியால் வெட்டிய கஞ்சா வியாபாரியை போலீசார் மடக்கிப்பிடித்த நிலையில்,

கத்தி மற்றும் கற்காளால் போலீசாரை தாக்கிவிட்டு இருவர் தப்பி ஓடிய சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது

சென்னை கண்ணகி நகருக்குட்பட்ட சுனாமி குடியிருப்பை சேர்ந்த கஞ்சா வியாபாரி உமாபதி . சரித்திர பதிவேட்டு குற்றவாளியான உமாபதி,

இரு இளைஞர்களை கத்தியால் வெட்டியதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரை மடக்கிப்பிடித்து போலீசார் காவல் நிலையம் அழைத்து வர முயன்றனர்.

உமாபதிக்கு ஆதரவாக கையில் கத்தி மற்றும் உடைந்த பாட்டிலுடன் ரகளை செய்த கூட்டாளி போலீசாரை தாக்கினான்

போலீசார் நிலை குலைந்த நிலையில் காவலர்களை கையாலும், கல்வீசியும் தாக்கி விட்டு அங்கிருந்து உமாபதியும் அவரது கூட்டாளியும் தப்பிச்சென்றனர்நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா குடிக்கிகள் அட்டகாசத்தால்,

அச்சத்தில் இருப்பதாகவும், போலீசாருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக அப்பகுதி மக்கள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்