​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பைக்கில் முந்திச் செல்வது தொடர்பாக மோதல்.. மதுபோதையில் அரசுப் பேருந்தை வழிமறித்து தாக்குதல்..!!

Published : Apr 20, 2024 10:01 PM

பைக்கில் முந்திச் செல்வது தொடர்பாக மோதல்.. மதுபோதையில் அரசுப் பேருந்தை வழிமறித்து தாக்குதல்..!!

Apr 20, 2024 10:01 PM

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் மோதிக்கொண்ட இரு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், அவ்வழியாகச் சென்ற அரசுப் பேருந்தை வழி மறித்து கற்களை வீசி கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

ஓலையனூர் மற்றும் குணமங்கலம் கிராமங்களைச் சேர்ந்த அந்த இளைஞர்களுக்கிடையே பைக்கில் யார் முந்திச் செல்வது என்பதில் தகராறு ஏற்பட்டு, அது மோதலாக மாறியதாகக் கூறப்படுகிறது.

அவ்வழியாக கோவையிலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை வழிமறித்து, நாங்கள் மோதிக்கொள்ளும் போது நீ எப்படி பஸ் ஓட்டலாம் என்று கேட்டு அவர்கள் கற்களை வீசியதாக சொல்லப்படுகிறது.

பேருந்தின் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தாக்குதலுக்குள்ளான பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.