​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் ஏ.டி.எம்.-ல் ரூ.100 எடுத்தால் ரூ. 500 வரும்படி செட்டிங் செய்து ரூ.6 லட்சம் நூதன கொள்ளை

Published : Apr 17, 2024 7:57 PM

சென்னையில் ஏ.டி.எம்.-ல் ரூ.100 எடுத்தால் ரூ. 500 வரும்படி செட்டிங் செய்து ரூ.6 லட்சம் நூதன கொள்ளை

Apr 17, 2024 7:57 PM

சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏ.டி.எம்.-ல் நூறு ரூபாய் எடுத்தால் 500 ரூபாய் வருவது போன்று செட்டிங்கை மாற்றி வைத்து கடந்த 5 மற்றும் 6 -ஆம் தேதிகளில் 2 நாட்களாக 6 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

காஞ்சிபுரம்- படப்பை பிரதான சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்திலும் இதே பாணியில் 13,லட்சம் ரூபாய் கொள்ளயடித்து சென்றது தெரியவந்துள்ளது. வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்