​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் ரூ.1.37 கோடி பறிமுதல்

Published : Apr 17, 2024 7:54 AM

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் ரூ.1.37 கோடி பறிமுதல்

Apr 17, 2024 7:54 AM

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 கோடியே 37 லட்சம் ரூபாயை இதுவரையில் பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடு குழுவில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு சுமார் 60 லட்சம் ரூபாய் ஒப்படைக்கப்பட்டதாகவும்,  84 புகார்கள் வரப்பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.