​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருமணம் ஆகாதவர்கள் செங்கோல் வாங்கக் கூடாதா?... உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

Published : Apr 16, 2024 6:22 PM

திருமணம் ஆகாதவர்கள் செங்கோல் வாங்கக் கூடாதா?... உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

Apr 16, 2024 6:22 PM

திருமணமாகாதவர்களுக்கும், வாழ்க்கைத் துணையை இழந்தோருக்கும் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பட்டாபிஷேகத்தின் போது செங்கோல் தரக் கூடாது என எந்த ஆகம விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியது.

அறங்காவலர் குழு தலைவரான ருக்மணி பழனிவேல்ராஜன் கணவரை இழந்தவர் என்பதால் அவரிடம் செங்கோல் வழங்கக்கூடது என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் இவ்வாறு வினவியது.