​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரிடம் நகை, பணம் கொள்ளையடித்த விவகாரம் : சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை

Published : Apr 16, 2024 12:50 PM

துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரிடம் நகை, பணம் கொள்ளையடித்த விவகாரம் : சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையர்களை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை

Apr 16, 2024 12:50 PM

ஆவடி அருகே நகைக்கடை உரிமையாளரிடம் துப்பாக்கி முனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நகை, 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரத்தில் தனிப்படை போலீஸ் ஆந்திராவுக்கு விரைந்துள்ளது.

பொன்னேரியை கடந்து கொள்ளையர்கள் காரில் தப்பி சென்ற சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார்,  ஆந்திரா நோக்கி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்துவருகின்றனர்.

கொள்ளையர்கள் எடுத்துச்சென்ற கடை உரிமையாளரின் செல்போனின் இருப்பிடத்தை ஆய்வு செய்து அதன் மூலம் அக்கும்பலை கைது செய்யவும் போலீசார் முயற்சித்து வருகின்றனர்.