மாநில உரிமைக்காகவும், மக்கள் நலனுக்காகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதற்காக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட ஆசியாவிலே பிரம்மாண்டமான கால்நடை பூங்காவை 3 வருடங்கள் ஆகியும் இதுவரை திறக்கவில்லை என்றார்
திமுக ஆட்சியில் மாநிலத்தின் கடன் தொகை எட்டரை லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.