​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் குழந்தை கடத்தல்... 3 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார்

Published : Apr 15, 2024 8:25 AM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் குழந்தை கடத்தல்... 3 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார்

Apr 15, 2024 8:25 AM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட ஒன்றரை வயது வடமாநில பெண் குழந்தை 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

புறநகர் மின்சார ரயில் டிக்கெட் கவுண்டர் அருகில் உறங்கிக்கொண்டிருந்த வடமாநில தம்பதியின்குழந்தையைக் கடத்திய இரண்டு பேர், நந்தகுமார் என்பவரது ஷேர் ஆட்டோவில் ஏறி, தேரடி பகுதியில் இறங்கிவிட்டுப் பணம் கொடுக்காமல், அப்துல் என்பவரது ஆட்டோவில் ஏறி எர்ணாவூரில் இறங்கியுள்ளனர்.

அவர்களைப் பின் தொடர்ந்து வந்த நந்தகுமார், அப்துலிடம் விஷயத்தைக் கூறியுள்ளார்.

ஆட்டோவில் வந்தபோது குழந்தை விற்பனை தொடர்பாக இருவரும் பேசிக்கொண்டு வந்ததை வைத்து, அப்துலும் நந்தகுமாரும் குழந்தைத் திருடர்களை மடக்கிப் பிடித்துவைத்து போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.