​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நா.த.க - தி.மு.க கூட்டணி கட்சியினர் தள்ளு-முள்ளு.. 'பிரச்னையை தூண்டுகிறார்கள்': சீமான் குற்றச்சாட்டு

Published : Apr 14, 2024 8:21 PM

நா.த.க - தி.மு.க கூட்டணி கட்சியினர் தள்ளு-முள்ளு.. 'பிரச்னையை தூண்டுகிறார்கள்': சீமான் குற்றச்சாட்டு

Apr 14, 2024 8:21 PM

நாகை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து அபிராமி அம்மன் சன்னதி திருவாசல் பகுதியில் பிரசாரம் செய்துக் கொண்டிருந்தார் சீமான்.

அதே வழியாக கூட்டணி கட்சியினரோடு பிரசாரம் செய்வதற்காக வாகனத்தில் வந்துக் கொண்டிருந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ்.

சீமானின் பிரசார வாகனத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்ததால் மாற்று பாதையில் செல்லுமாறு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்தும் அதனை ஏற்காமல் முன்னேறிச் சென்றனர் திமுக கூட்டணி கட்சியினர்.

திமுக கூட்டணியின் கலைக்குழு மற்றும் பிரசார வாகனங்கள் சீமான் பேசும் இடத்திற்கு வரும் போது நாம் தமிழர் கட்சியினர் வழியை மறித்து நின்று கோஷம் எழுப்பினர்.

பதிலுக்கு திமுக கூட்டணியினரும் கோஷம் எழுப்பியதால் இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பிரசார வாகனத்தில் நின்றவாறு சீமான் இதனை வேடிக்கை பார்க்க, போலீஸார் இருதரப்பையும் சமாதானப்படுத்த, கோஷமிட்டவாறு அப்பகுதியை கடந்தனர் திமுக கூட்டணியினர்.

பிரச்னையை தூண்டுவதற்காக வேறு கட்சியின் பிரசார வாகனத்தை போலீஸார் அனுமதித்ததாக சீமான் குற்றம்சாட்டினார் .