​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“ராம்கி ஆலையை அகற்றுங்க”.. ஒற்றை கோரிக்கை.. ஓ.பி.எஸ்ஸை பேச விடாமல் மக்கள் தடுத்த பின்னணி...!

Published : Apr 14, 2024 12:24 PM



“ராம்கி ஆலையை அகற்றுங்க”.. ஒற்றை கோரிக்கை.. ஓ.பி.எஸ்ஸை பேச விடாமல் மக்கள் தடுத்த பின்னணி...!

Apr 14, 2024 12:24 PM

பா.ஜ.க கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் பலாபழம் சின்னத்தில் போட்டியிடும் ஓ பன்னீர் செல்வம் அ.முக்குளம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவரை பேசவிடாமல் மக்கள் தடுத்தனர்

தங்கள் பகுதியில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், இடையூறாக இருந்து வரும் ராம்கி மருத்துவ நச்சுக்கழிவு எரியூட்டும் ஆலையை நிரந்தரமாக மூடி அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

ஓ.பி.எஸ் “என்னை பேச விடுங்கள்” என்று கேட்டும் மக்கள் கோஷமிட்டுக் கொண்டே இருந்தனர்

அருகில் நின்ற மனோஜ் பாண்டியன் மக்களின் கோரிக்கையை எடுத்துக்கூறியதும் தான் வெற்றி பெற்றால் அந்த ஆலையை இழுத்து மூட நடவடிக்கை மேற்கொள்வதாக ஓ.பி.எஸ் உறுதி அளித்து சென்றார்