​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் இந்திய மாணவர் மர்ம மரணம்

Published : Apr 06, 2024 6:08 PM

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் இந்திய மாணவர் மர்ம மரணம்

Apr 06, 2024 6:08 PM

இந்த ஆணடில் 10-வது சம்பவமாக அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் உள்ள கிளவ்லேண்ட் நகரில் கல்வி பயின்று வந்த இந்திய மாணவர் உமா சத்யசாய் கத்தே என்பவர் உயிரிழந்தார்.

இத்தகவலை உறுதி செய்துள்ள நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம்,  உமா சத்யசாயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர, அனைத்து உதவிகளும் குடும்பத்திற்கு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இந்திய மாணவரின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.