​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனுமதியின்றி இயங்கும் தார் கலவை ஆலையால் உடல்நல பாதிப்பு... உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Published : Apr 06, 2024 4:06 PM

அனுமதியின்றி இயங்கும் தார் கலவை ஆலையால் உடல்நல பாதிப்பு... உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Apr 06, 2024 4:06 PM

திருக்கழுக்குன்றம் ஈச்சங்கருணை கிராமத்தில் இயங்கி வரும் இரு தார் கலவை ஆலைகளிலிருந்து வெளிப்படும் கரும்புகையால் மூச்சுத்திணறல் ஏற்படுவதோடு, அதிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாழாவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எந்த விதமான உரிமமோ, அனுமதியோ இன்றி தார் கலவை ஆலைகள் இயங்குவதாக விவசாயிகள் கூறுவதற்கும் விளக்கமளிக்க ஆலை தரப்பில் மறுத்துவிட்ட நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருவதாக மாசுக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.