​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிருஷ்ணகிரில் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து 10 லட்சம் ரூபாய் கொள்ளை

Published : Apr 06, 2024 3:04 PM

கிருஷ்ணகிரில் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து 10 லட்சம் ரூபாய் கொள்ளை

Apr 06, 2024 3:04 PM

கிருஷ்ணகிரி குருபரப்பள்ளியில் எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த கும்பலை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகாலை 3 மணியளவில் ஏ.டி.எம் அறைக்குள் நுழைந்த கொள்ளைக்கும்பல் சிசிடிவி கேமிராக்கள் மீது கருப்பு நிற ஸ்பிரேவை அடித்து, வெல்டிங் மிஷின் உதவியுடன் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடித்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளைக் கும்பல் டாடா ஏஸ் வாகனத்தில் தப்பிய காட்சிகள் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளதை கண்டுபிடித்த போலீசார்  விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.