​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓசூர் அருகே ரூ.15 கோடி தங்க நகைகள் பறிமுதல்

Published : Apr 06, 2024 8:18 AM

ஓசூர் அருகே ரூ.15 கோடி தங்க நகைகள் பறிமுதல்

Apr 06, 2024 8:18 AM

பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு எடுத்து வரப்பட்ட 15 கோடி ரூபாய் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நள்ளிரவில் ஓசூர் நோக்கி வந்த தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் கவச வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டபோது, 69 பெட்டிகளில் தங்க நகைகள் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது.

டைட்டன் தொழிற்சாலைக்கு அவற்றை எடுத்து செல்வதாக ஓட்டுநர் கூறிய நிலையில், 45 பெட்டிகளில் இருந்த நகைகளுக்கு மட்டுமே ஆவணங்கள் இருந்ததால், எஞ்சிய 24 பெட்டிகளில் இருந்த நகைகளை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.