​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் 3,321 மதுக்கடைகளை மூடியவர் வழக்கறிஞர் பாலு : அன்புமணி

Published : Apr 06, 2024 6:56 AM

தமிழகத்தில் 3,321 மதுக்கடைகளை மூடியவர் வழக்கறிஞர் பாலு : அன்புமணி

Apr 06, 2024 6:56 AM

அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளரும், வழக்கறிஞருமான பாலுவை ஆதரித்து திருத்தணி ஆர்.கே.பேட்டையில் பிரச்சாரம் செய்த அன்புமணி ராமதாஸ், பாலு வெற்றி பெற்றால் மதுக்கடைகள் இல்லாத தொகுதியாக அரக்கோணம் மாறும் என கூறினார்.

1971-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மது விற்க அனுமதி அளித்ததன் மூலம் 3 தலைமுறையை திமுக பாழாக்கிவிட்டதாக கூறிய அன்புமணி ராமதாஸ், அமைச்சர் துரைமுருகன் இதுவரை ஒரு அணையாவது கட்டியுள்ளாரா என கேள்வி எழுப்பினார்.