​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாநில உரிமையை நிலை நாட்ட உச்சநீதிமன்றத்தில் போராடுகிறோம்: ஸ்டாலின்

Published : Apr 02, 2024 10:05 PM

மாநில உரிமையை நிலை நாட்ட உச்சநீதிமன்றத்தில் போராடுகிறோம்: ஸ்டாலின்

Apr 02, 2024 10:05 PM

தேர்தலுக்காக கச்சத்தீவு பற்றி பேசும் பிரதமர் தமிழக மீனவர்கள் கைது, தாக்குதலை இதுவரை கண்டிக்காதது ஏன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

வேலூரில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்த பிரதமரிடம் கச்சத்தீவை மீட்குமாறு தாம் கொடுத்த கோரிக்கை மனுவின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.

எதிர்க்கட்சியாக இருந்த போதும் தமிழ்நாட்டு நலனுக்காக போராடிய தி.மு.க., ஆளுங்கட்சியான பின் மாநில உரிமையை நிலை நாட்ட உச்சநீதிமன்றம் வரை சென்று போராடுவதாகவும் மு.க. ஸ்டாலின் கூறினார்.