நீலகிரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்குமாறு வீடு வீடாக கோரிக்கை விடுத்த ஆசிரியர்களை மதுபோதையில் வந்த திமுக வார்டு உறுப்பினர் ஆலன், மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர் அதிமுகவிற்கு வாக்கு சேகரிக்க வந்ததாக கூறி தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தேவாலா ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.