​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தாமரைச் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் -ராதிகா சரத்குமார்

Published : Apr 02, 2024 7:04 AM

பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தாமரைச் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் -ராதிகா சரத்குமார்

Apr 02, 2024 7:04 AM

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகளை தங்களுடையது என திமுக அரசு தம்பட்டம் அடிப்பதாகக் கூறினார்.

ராதிகாவைத் தொடர்ந்து பேசிய சரத்குமார், திமுகவினர் கீழ்த்தரமான அரசியல் செய்வதாகக் கூறினார்.

பிரதமர் மோடியை 29 பைசா என்று சொல்லும் உதயநிதியை 30 ஆயிரம் கோடி என்று அழைக்கலாமா என்று கேள்வி எழுப்பினார்.

சிவகாசி அருகே வெம்பக்கோட்டை பகுதியில் பிரச்சாரம் செய்த ராதிகா, அவ்வழியாகச் சென்ற பட்டாசு ஆலைத் தொழிலாளர்களின் பணியாளர் பேருந்தில் ஏறி வாக்கு சேகரித்தார்.

விபத்தால் பாதிக்கப்படும் பட்டாசு ஆலைத் தொழிலாளர்களுக்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ராதிகா உறுதியளித்தா.