​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க வேட்பாளர் காரை வழிமறித்து வாக்குவாதம்... கேள்வி எழுப்பிய பெண் பயணி...பதறிய தி.மு.க வேட்பாளர்

Published : Apr 02, 2024 6:48 AM

தி.மு.க வேட்பாளர் காரை வழிமறித்து வாக்குவாதம்... கேள்வி எழுப்பிய பெண் பயணி...பதறிய தி.மு.க வேட்பாளர்

Apr 02, 2024 6:48 AM

தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் ராணிஸ்ரீகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, பாட்டாக்குறிச்சியில் அவரது காரை தி.மு.கவினர் வழிமறித்தனர்.

பிரச்சாரத்திற்கு வருவது குறித்து திமுகவின் நிர்வாகிகளான தங்களுக்கு எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை, என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பூதூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வம், அங்கு நின்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்தில் ஏறி பயணிகளிடம் வாக்கு கேட்டார்.

ஏற்கனவே வேகுது இதுல பஸ்ச நிறுத்தி ஓட்டு கேட்கணுமா, ஓட்டு போடுறவங்க கூட போடாம விட்டுற போறாங்க என பெண் பயணி ஒருவர் கூற, முதலுக்கே மோசமாகி விடுமோ என பயந்து உடனடியாக கீழே இறங்கினார் வேட்பாளர் செல்வம்.