​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.பெரிய சாமியிடம் மக்கள் கேள்வி மேல் கேள்வி தண்ணீர் இல்லை.. வேலை இல்லை என ஆவேசம்

Published : Apr 02, 2024 6:40 AM

ஐ.பெரிய சாமியிடம் மக்கள் கேள்வி மேல் கேள்வி தண்ணீர் இல்லை.. வேலை இல்லை என ஆவேசம்

Apr 02, 2024 6:40 AM

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாறைப்பட்டி ஊராட்சி இராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் வாக்குவாதம் செய்தனர்

குடிக்க தண்ணீர் இல்லை, பிள்ளைகளுக்கு வேலையில்லை என்று பெண்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்

ஊருக்குள் வரக்கூடாது என்று நீ சொல்லக்கூடாது என்று அமைச்சர் எச்சரித்த நிலையில் ஆளுக்கு ஒரு பிரச்சனையை சொல்லி கேள்விகளாக எழுப்பினர்

கடும் தள்ளுமுள்ளுக்கிடையே பிரச்சார வாகனத்தில் ஏறி ஐ.பெரியசாமி புறப்பட்டுச் சென்றார்.