​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும் பணியின்போது 5 பேர் உயிரிழந்த வழக்கில் 3 பேரை கைது செய்த போலீஸ்..!

Published : Apr 01, 2024 4:11 PM

புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும் பணியின்போது 5 பேர் உயிரிழந்த வழக்கில் 3 பேரை கைது செய்த போலீஸ்..!

Apr 01, 2024 4:11 PM

புதுச்சேரியில் வாய்க்கால் தூர் வாரும்போது மதில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர், மேற்பார்வையாளர் உட்பட 3 பேரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

கவனக்குறைவாக செயல் பட்டு மரணம் விளைவித்தது, அவசரமாக அல்லது அலட்சியமாக பாதுகாப்பு இன்றி தொழிலாளர்களை வைத்து பணிகள் செய்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஒப்பந்ததாரர் மோகன், மேற்பார்வையாளர் கிருஷ்ணன்  உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.