​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இப்படி கூட்டினால் எப்படி சாமி குப்பை வரும்..? ஓட்டுக்கு பணம் கொடுத்து ஏமாற்றுவார்கள் உஷார்

Published : Mar 30, 2024 9:57 PM



இப்படி கூட்டினால் எப்படி சாமி குப்பை வரும்..? ஓட்டுக்கு பணம் கொடுத்து ஏமாற்றுவார்கள் உஷார்

Mar 30, 2024 9:57 PM

ஆரணி பாராளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் கணேஷ்குமார், திருவண்ணாமலை மாவட்டம் எம்.பி. தாங்கல் கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்றார்.

அங்குள்ள கோயில் முன்பு கிடந்த குப்பைகளை அக்கறையாக பெருக்குவது போல கணேஷ்குமார் ஆக்ட் கொடுத்தார் 

தொடர்ந்து பேசிய கணேஷ்குமார் ,அரசு பணிகளுக்கு பணம் கொடுக்காமல் செல்ல இயலவில்லை என்றும் 5 லட்சம் ரூபாய் வரை வேலைக்கு தகுந்தாற் போல் லஞ்சம் பெறப்படுவதாக  தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டினார்

பெண்களிடம், சிலிண்டர் விலை, பெட்ரோல் விலையை குறைப்பதாக வாக்குறுதி அளிக்கும் திமுக, ஓட்டுக்கு 500ரூபாய் 200ரூபாய் கொடுத்து ஏமாற்றி விடுவதாகவும் கணேஷ்குமார் கூறினார்