விசாரணை அமைப்புகள் எடுக்கும் நடவடிக்கைகளை அரசியல் ரீதியாக பார்த்தால் தப்பு செய்தவர்களை தண்டிக்கவே முடியாது என காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் மீதான வருமான வரி துறை நடவடிக்கை தொடர்பாக வானதிசீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதி, சின்னம் பெறுவதற்கு வேலை செய்யாமல் தூங்கி விட்டு சில அரசியல் கட்சிகள் தங்கள் மீது பாய்வதாகவும் விமர்சனம் செய்தார்.